தேடல்

Friday 27 March 2015

பராமரிப்பின்றி கீழக்கரை நீரேற்று நிலையம் ...!!

கீழக்கரை:26.03.2015
 வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு சொந்தமான மணல் மேட்டில் பின்புறம்  50 சென்ட் 287 கோல் அளவுள்ள இடம் தற்போதைய மதிப்பு  (ரூபாய் 3  மூன்று கோடி )கீழக்கரை மக்களின் குடிநீர் தேவையை போக்க மேல்நிலை குடிநீரேற்ற தொட்டி கட்டுவதற்கு  அப்போதைய பஞ்சாயத்  கீழக்கரை நகராட்சிக்கு வடக்குதெரு ஜமாத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.





 இப்போது காவேரி கூட்டு  குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.ஆனால் நீரேற்று நிலையம் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.


இது குறித்து அதை சுற்றி வசிக்கும் பெண்களிடம் கேட்டபோது .இந்த நீரேற்று நிலையம் சுமார் 40 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது . ஆனால் இங்கே பராமரிப்பில்லாமல் கேப்பாடற்று கிடக்கிறது.

15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்யவேண்டும்

 நீரேற்று நிலையத்தை சுற்றி சுற்று சுவர் இல்லாமல் யார் வேண்டுமானலும் சென்று வரலாம் என்றாகி விட்டது . சிலநேரங்களில் இரவு 7 மணிக்கு மேல் சில சமுக விரோதிகள் இதன் உள்ளே சென்று மது அருந்துவதும்.சூதாட்டம் நடத்துவதும்.


      மற்றும் கஞ்சா, போதை வஸ்துகளும் இங்கே உபோயோகிக்கிரார்கள். சிலபேர் நீரேற்று தொட்டியின் மேல ஏறி மது அருந்துகிறார்கள் .இதன் படிக்கட்டுகளும் சேதமடைந்து கிடக்கிறது.இதில் யாரும்  ஏறி தவறி விழுந்தால் இறக்க நேரிடும்.  இவர்களை தட்டிக்கேட்டால் .இது உன் இடமா உன் வேலையை பாரு என்று எங்களையே அதட்டுகிறார்கள் நாங்கள் பெண்களாக இருந்து என்ன  செய்வோம்.


  இதற்க்கு கீழக்கரை நகராட்சிதான் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் முன் காக்கவேண்டும் வந்த பின்பு காப்பாற்றி வேலை இல்லை. என்று அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறினார்கள் 

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
             (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக .....!!)







   
  

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.