கீழக்கரை: 24/05/2015
கடந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் கீழக்கரை அளவில் மெட்ரிக் தேர்வில் கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பர்ஹத் சிபானா என்ற மாணவி 494 மதிப்பெண் எடுத்து சாதனைபடைத்துள்ளார் இதே மாணவி 3 பாடங்களில் 100 க்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பள்ளியின் கல்விக்குழு துணை தலைவர் ஜனாப்.M.M.S.முஹைதீன் இப்ராகிம் அவர்கள் கூறுகையில் இந்த மாணவி படிப்பிலும் ஒழுக்கத்திலும் மற்றும் பள்ளிக்கு தவறாமல் வருகை போன்றவைகளில் முதலிடம் பிடிப்பார், இதே மாணவி கீழக்கரை அளவில் 494 மதிப்பெண் எடுத்து கீழக்கரை அளவில் முதலிடம் பெற்றுள்ளார், என்பது மிகவும் எங்கள் பள்ளிக்கு பெருமை படக்கூடிய விஷயமாகும் எங்கள் முஹைதீனியா பள்ளியில் பயிலும் அத்தனை மாணவ-மாணவிகளும் நல்ல ஒழுக்கத்துடனும் , நல்ல கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது, கடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.
அதே போல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மற்றும் 450 மேல் 16 மாணவ மாணவிகள் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நல்ல கல்வி கற்றுகொடுக்கும் ஆசிரியைகளுக்கும்,பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துகொள்வதாக என்று அவர் கூறினார்.
கடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
அதே போல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மற்றும் 450 மேல் 16 மாணவ மாணவிகள் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நல்ல கல்வி கற்றுகொடுக்கும் ஆசிரியைகளுக்கும்,பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துகொள்வதாக என்று அவர் கூறினார்.
கடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!