கீழக்கரை செய்திகள் : 13-12-2015
கீழக்கரையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீனாட்சி புரத்தை சேர்ந்த சின்னசாமி, S.N. தெருவை சேர்ந்த காசீம் மற்றும் சங்கர் ஆகிய முன்று நபர் களும் கீழக்கரை ஜெட்டி பாலத்திற்கு சென்றனர்.
இதில் சங்கர் என்ற வாலிபர் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார் உடனே மற்ற இரண்டு நண்பர்களும் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்து தேடினர். நீண்ட நேரம் தேடியும் சங்கரை காணவில்லை உடனே சலீம் மட்டும் நீந்தி கரைஏறிவிட்டார் சங்கரை தேடி சென்ற சின்னசாமியையும் காணவில்லை. மீன் பிடிப்பவர்கள் மூலம் சுமார் 1 மணி நேரம் தேடிப்பார்த்த பிறகு கடலுக்கு அடியில் சங்கர் மற்றும் சின்னசாமியை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் சின்னசாமீ காப்பாற்றப்பட்டார், சங்கர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.