கீழக்கரை:11/05/2015
கீழக்கரையில் கடந்த மூன்று வருடமாக கீழக்கரை மெடிக்கல் மிஷின் மருத்துவமனை இயங்கி வந்தது. தற்போது பெஸ்ட் ஸ்டார் குழுமத்தின் கீழ் தற்போது இயங்கி வருகிறது. இம் மருத்துவமனை நமது கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.
சிறிய நோயாக இருந்தாலும் அருகிலுள்ள ராமநாதபுரத்திற்கு செல்லும் காலம் இன்றளவும் இருந்து வருகிறது காரணம் சரியான முறையில் நமதூருக்கு மருத்துவமனையும் மருத்துவமும் இல்லாத காரணம் தான்.
இனி அந்த கவலை நமதூர் மக்களுக்கு ஏற்படாத வண்ணம் அணைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை பெஸ்ட் ஸ்டார் குழுமத்தின் மூலம் தற்போது கிழக்குதெருவில் 24 மணிநேரமும் கீழக்கரை மெடிக்கல் மிஷின் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இது குறித்து பெஸ்ட் ஸ்டார் குழுமத்தின் செயல் இயக்குனர் சுல்தான் அப்துல் காதர் ,மற்றும் பெஸ்ட் ஸ்டார் குழுமத்தின் இயக்குனர் திரு,அழகேசன் அவர்களிடம் கேட்டபோது. எங்களது குழுமத்தின் சார்பில் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறோம்.இம் மருத்துவமனையில். சிறப்பு மருத்துவர்கள் வாரம் இருமுறை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் மகப்பேறு மருத்துவர் கமலா ராகுல் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் புரோஸ்கான்
மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவர் அல் அம்ரா MBBS, சுல்தான் MBBS மற்றும் (24) மணிநேரம் மருத்துவ சேவையை கருத்தில்கொண்டு இரவில் ஒரு மருத்துவரும் பணிபுரிந்து வருகின்றனர் . இம் மருத்துவமனையில் செல் கவுண்டிங் மிசின், பிசியோதெரபி ,உயர் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்கள்.மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எங்கள் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறோம் கடந்த 5 ம் தேதி அன்று உடல் எலும்பில் சுண்ணாம்பு சத்தை அறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தி 300 மேற்பட்டவர்கள் பயனடைந்தனர் (இந்த பரிசோதனை ஒரு நபருக்கு 1500 ரூபாய்) இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம். என்று கூறினார்கள்.
இம் மருத்துவமனையின் சிறப்பம்சமாக 24 மணி நேரமும் மருந்துகள் கிடைக்கும் வண்ணம் மருந்துகடை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது.
இம் மருத்துவமனை 12.05.2015 அன்று திறக்கப்படஉள்ளது. இம் மருத்துவமனை சிறந்து விளங்கி சிறப்புடன் செயல்பட கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)
. இம் மருத்துவமனை 12.05.2015 அன்று திறக்கப்படஉள்ளது. இம் மருத்துவமனை சிறந்து விளங்கி சிறப்புடன் செயல்பட கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.