கீழக்கரை 02.03.2015
கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியின் 131 வது ஆண்டுவிழா ஜனாப் M.K.S.சுல்தான் அப்துல் காதர்B.com, அவர்கள் தலைமையில் நடந்தது. கிழக்குதெரு முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில், ஜனாப் S.M ஜவஹர் சாதிக் அவர்கள் ( தாளாளர் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி) வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப்.ஜவாஹிருல்லாஹ் M.B.A.,M.phil.,ph.d.,அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் .
வாழ்த்துரை வழங்க திரு .ராமநாதன் M.A.,B.Ed.,கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் திருப்புல்லாணி.மற்றும் நகர் மன்ற தலைவி S.ராவியத்துல் கதரியா முன்னாள் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் M.M.S.செய்யது இபுராஹீம் .
மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் ஜனாப் சேகு பஷீர் அஹமது பொருளாளர் ஜனாப் ஹாஜா அனீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட அளவில் ஓவிய போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது .இன் நிகழ்ச்சியை அப் பள்ளியின் ஆசிரியர் ஜனாப் S.இபுராஹிம்ஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.