தேடல்

Monday 16 March 2015

பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் ஆண்டு விளையாட்டுவிழா ..!!



கீழக்கரை 14.03.2015

         வள்ளல் சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா அந்த பள்ளியின் தாளாளர் ஜனாப ,சரிபா அஜீஸ் அவர்கள் தலைமையில் நடந்தது.

           இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கீழக்கரை காவல் துனைகண் கானிப்பாளர் K.மகேஸ்வரி M.SC ( IT ), அவர்கள் கலந்துகொண்டார்கள்.



மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையா ,சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் ஜனாப் ,சேக் தாவூது,மற்றும் அப்பள்ளியின் முதல்வரும் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

  மற்றும் மாணவர்களின் கராத்தே செய்துக்காட்டபட்டது,தேசிய அளவில் கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 இப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக கராத்தே பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
.


 இந் நிகழ்ச்சியின் நிறைவாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி  K.மகேஸ்வரி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் அப்பள்ளியில் பனி புரியும் ஆசிரியையால் நன்றி கூறப்பட்டது.

   (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
              (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
   

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.