கீழக்கரை:03/06/2015
தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில மையத்தின் முடிவின் படி, உள்வட்ட அளவில் மண்டல துணை வட்டாட்சியர் பணியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறித்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறை அரசு செயலாளர் மற்றும் முதன்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு 06.08.2014 அன்று நிகரிச் செய்தி அனுப்பியும், 26.08.2014 ல் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடத்தியும் 08.01.2015 அன்று மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் சென்னையில் நடத்தியும் கடந்த 22.01.2015 ல் ஓட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளாத காரணத்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகம் முதல் வட்டாச்சியர் அலுவலகம் வரை உள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான அலுவலர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் போராட்டம் (எதிர்வரும் 04.06.2015 மற்றும் 05.06.2015 ஆகிய இரண்டு நாட்களும் அலுவலக வேலை நேரத்திற்கு முன்பாக மலை 1மணி நேரம் அலுவலகப் பணிகளில் இருந்து வெளிநடப்பு செய்வது என்றும் எதிர்வரும் 24.06.2015 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு தினங்கள் வேலை நிறுத்தம்) செய்வது என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுரம் மாவட்டம் மையம் முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் சிரமத்தை போர்த்துக்கொண்டு எங்களது நியாயமான போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு\ வழங்கும்மாறு தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுரம் மாவட்டம் மையம் கேட்டுக்கொள்கிறது.
பொது மக்கள் சிரமத்தை போர்த்துக்கொண்டு எங்களது நியாயமான போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு\ வழங்கும்மாறு தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுரம் மாவட்டம் மையம் கேட்டுக்கொள்கிறது.
என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!