கீழக்கரை 22/04/2015
கீழக்கரையில் 22/04/15 நள்ளிரவு சுமார் 1 மணியளவில் பழைய போஸ்ட் ஆபீஸ்
சாலை கிழக்குத்தெரு செல்லும் வழியில் உள்ள சிட்டி யூனியன் தனியார் வங்கியில் பணிபுரியும் ATM மிஷன் இரவு காவலாளி பழனி வயது (40), இரவு 1 மணியளவில் காவல் பணிபுரியும் பொழுது இருவர் அவரை தாக்கி சட்டை பையில் இருந்த
செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
உடனே. காவலாளி பழனி கீழக்கரை காவல் நிலையத்திற்கு சென்று அங்கே இரவு பணியில் இருந்த துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.
(கீழக்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம்)
இதனை அடுத்து துணை ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது கிழக்குதெருவைச் சார்ந்த நபர்கள் என தெரியவந்தது இருவரையும் துணை ஆய்வாளர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.