தேடல்

Thursday 26 March 2015

கரடு முரடான சாலை கண்டுகொள்ளாத நகராட்சி ..!!

கீழக்கரை 26.03.2015
  கீழக்கரையின் இரண்டாவது பெரிய சாலை சேகு அப்பா சாலை இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில் தனியார் மருத்துவமனைகளும், கிறிஸ்துவர்கள் வழிபடும் சர்ச்,உள்ளது.


ஆனால் இந்த சாலை கரடு முரடாகவும் குண்டும் குளியுமாகவும் காட்சி அளிக்கிறது. இது குறித்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் திரு வினோத் அவர்களிடம் கேட்டபோது  இந்த சாலையில் அனைத்து பள்ளி வாகனங்களும்,மட்டுமல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சாலையில் செல்கிறார்கள்.

இந்த சாலையில் ஆங்காங்கே சாக்கடை நீர் கட்டுவதால் அங்கு வசிக்கும் மக்கள் வீடு உடைத்த கற்களை (ரப்பீஸ்) கொட்டி ரோட்டை நாசப்படுத்துகிரர்கள் இதை கீழக்கரை நகராட்சியும் கண்டுகொள்வதில்லை 
.

இந்த குறைகளை சுற்றிக்காட்டி அரசியல் கட்சிகள்  நகராட்சியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.  உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார் .

        (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!! )

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.