தேடல்

Saturday 14 March 2015

கீழக்கரையில் அழுகிய நிலையில் உயிருக்கு போராடும் மூதாட்டி ...!!

கீழக்கரை 14.03.2015
       கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் அலுகிய நிலையில் ஒரு மூதாட்டி சுமார் ஒரு வாரமாக மூடிய நிலையில் இருந்ததை அடுத்து ,திரு வேலாயுதம் அவர்கள் தொலைபேசியில் கீழக்கரை நகர் நல இயக்கத்திற்கு தகவல் தெரிவித்தார்.



       உடனே கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பஷீர் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பார்த்த போது அவர்கள் சொன்னது உண்மை என புரிந்தது.


       அங்கு தினமும் சிறிய பேருந்து நடத்துனர் தமிழரசன் அவர்களிடம் கேட்டபோது இந்த பெண்மணியை நான் கடந்த ஒருவாரமாக பார்த்து வருகிறேன்.இந்த பெண்ணுக்கு சொந்த பந்தங்களோ இருப்பதாக தெரியவில்லை.எப்போது பார்த்தாலும் போர்வை போர்த்தியபடி இருக்கும் யாரும் பார்காததினால் லேசான துர்நாற்றம் வீசுகிறது.இந்த மூதாட்டிக்கு முறையான சிகிச்சை அளித்தால் காப்பாற்றலாம் என்று கூறினார்.


             இதை அடுத்து கீழக்கரை நகராட்சி தலைவி அவர்களிடம் தொடர்புகொண்டு விவரங்களை சொன்னபோது உடனே அந்த மூதாட்டியை தகுந்த சிகிசை அழித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்  

(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
           (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.