தேடல்

Tuesday 24 March 2015

பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பாதை இல்லாமல் பரிதவிக்கும் அவலம்..?

கீழக்கரை:24.03.2015

கீழக்கரை இரண்டாவது பெரிய சாலையாக மக்கள் போக்குவரத்துக்கு
 பயன்படுத்துவது வடக்குதெரு தெருவில் உள்ள சேகு அப்பா தர்கா சாலை இதில் தினந்தோறும்  நூறுக்கணக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

ஆனால் சமீபக காலமாக கீழக்கரை நகர் முழுவதும் தன்னிர்குழாய் பதித்து வருகிறார்கள் இது குறித்து அந்த சாலையில் புஹாரி கோழிக்கறி கடை நடத்திவரும் நவாஸ் அவர்களிடம் கேட்டபோது இந்த ரோடு அதிக போக்குவரத்து செல்லும் பாதையாக விளங்குகிறது.


கடந்த ஐந்து  வருடங்களுக்கு முன்பாக சிமன்டினால் சாலை போடப்பட்டது
இந்த சாலையின் வழியே..பள்ளி செல்லூம் குழந்தைகள் சென்று வருகின்றனர்,ஆனால் தற்போது கீழக்கரை நகராட்சியோ...! தண்ணிர் குழாய் பதிக்கிறோம்.என்ற பெயரில் நல்ல இருக்கும் ரோட்டைபால் படுத்துவதுடன் தண்ணீர் குழாய் வருவதற்கு முன்பாகவே ரோட்டை  தோண்டி நன்றாக  இருக்கும் சாலையை சீரழித்துவிட்டு சரி செய்யாமல் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.இதனால் பள்ளிசெல்லும் மாணவ -மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல்  அவதிபடுகிறார்கள்



உடனே நகராட்சிஇந்த சாலையை சீரமைக்கவேண்டும் ,என்று கூறினார்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
             (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

1 comment:

  1. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.