தேடல்

Monday 23 March 2015

கீழக்கரையில் மனிதனை கொல்லும் ரசாயன இனிப்பு ..!! அதிகம் பகிருங்கள்

கீழக்கரை: 23.03.2015
       
 ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வெகு வேகமாக பரவிவருகிறது. இது நமதூர் கீழக்கரையிலும் இந்த வேதிப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இனிப்பு பவுடர் .அதாவது மேல உள்ள படத்தில் நீங்கள் காண்பது. கோல்ட் மோகர் இதனுடைய பயன்பாடு  கனரகதொழிற்ச்சாலைகளில் பயன்படுத்தப்படும்  எந்திரங்களை சுத்தம் செய்யும் ஒரு வேதிப்பொருள்.


ஆனால் இதை அறியாத மக்கள் தற்போது சக்கரை (சீனி) பதிலாக இதை பயன்படுத்துகிறார்கள் என்றால் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.நமதூர் மக்கள்  இதை கடைகளில்.ரோஸ் மில்க் பவுடர் என கேட்டு வாங்கி சென்று. சர்பத்,ரோஸ்மில்க், ஐஸ் கிரீம், பேக்கரி, மிட்டாய் .போன்றவற்றில் கலந்து.கடைகளில்  விற்பனை செய்கிறார்கள்.  (100 gm அளவுள்ள இந்த வேதிப்பொருள் 1 ஒரு கிலோ சீனி சக்கரைக்கு நிகரானது)



   இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஊடக பிரிவு ஆலோசகர் ஜனாப் சாலிஹ் ஹுசைன் அவர்கள் மருத்துவர்களிடம்  கேட்ட போது .இந்த வேதிப்பொருளானது. உண்பதற்கு உகந்ததல்ல என்று அதில் எழுதபட்டிருக்கிறது. இதை மக்கள் கண்டுகொள்வதே இல்லை. இதை உபயோகித்தால்.குடல் உபாதைகள் ஏற்படுவதுடன், குடல் புற்றுநோய் வரும் என்று கூறினார்.
  அன்பார்ந்த வியாபாரிகளே இந்த வேதிப்பொருள் கேட்டு வரும் வாடிக்கையாளர்களிடம் இதனுடைய பயன்பாட்டை எடுத்துக்கூறுங்கள். இதனுடைய வீரியத்தை எடுத்து சொல்லி அடுத்த தலைமுறை நோயற்ற தலைமுறையாக மாற்ற நாம் பாடுபடுவோம்.


   (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
           (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
  அதிகம் பகிருங்கள் உங்களுடைய ஒரு பகிர்வு நமதூர் மக்களை  காப்பாற்றும் 

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.