தேடல்

Friday 20 March 2015

கீழக்கரையில் இரவில் மருத்துவர்கள் இல்லாமல் பரிதவிக்கும் பொதுமக்கள்..!!

கீழக்கரை 21.03.2015
   நமதூர் கீழக்கரையின் வளர்ச்சி முன்பைவிட பெரும் வளர்சிகண்டுள்ளது. காரணம்.முன்பு இருந்த பஞ்சாயத் இப்போது இல்லை தற்போது இரண்டாம் நிலை நகராட்சி அந்தஸ்து .இனி தாலுகா அலுவலகம் செல்ல ராமநாதபுரம் செல்லவேண்டாம் .கீழக்கரையே தாலுகா அறிவிப்பு செய்தாகிவிட்டது.குட்டி சிங்கப்பூர் ஜப்பான் ,என்று சொல்வதற்கு மாட மாளிகைகள் தோன்றிவிட்டது.தெருவெங்கும் துரித உணவகங்கள், அதிகமான தனியார் மருத்துவமனைகள் ,போன்ற  எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டது,வித விதமான நோய்களும் வந்துகொண்டிருக்கிறது.

 இத்தனை மாற்றங்கள் வந்த நமதூருக்கு மருத்துவம் என்பது இன்னும் கேள்விக்குறியாகதான் உள்ளது .எந்த ஒரு  நோய்கள் ஏற்ப்பட்டாலும் அருகில் உள்ள ராமநாதபுரத்திற்கு செல்லவேண்டும்.என்ற கட்டாயத்தில் உள்ளோம்.

இது ஒருபுறமிருக்க.இரவில் யாருக்காவது உடல்சுகவீனம் ஏற்பட்டால் அவர்கள் இறப்பது தவிர வேற வழியில்லை .காரணம் இரவில் எந்த ஒரு மருத்துவரும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் சிகிழ்ச்சை அளிக்க முன்வருவதில்லை.இது நமதூருக்கு ஒரு சாபக்கேடு.இது குறித்து தெற்குதெருவில் வசிக்கும் பாதுஷா அவர்களிடம் கேட்டபோது இரண்டு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு இரவில் நெஞ்சுவலி என  எனக்கு தெரிந்து.

 உடனே அருகில் உள்ள மருத்துவரை அழைத்ததற்கு.அவர் இரவில் வரவில்லை.உடனே பாதிக்கப்பட்ட எனது நண்பரை வாகனத்தில் தூக்கிகொண்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவரை கானசென்றோம்.அவரும் அவருடைய மருத்துவமனை பூட்டி திறக்கவேயில்லை நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்து திறக்காதால்.கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றோம்.அங்கு செல்லும் போது இரவு  மணி 1.30 இருக்கும்.ஆனால் அங்கேயும் மருத்துவர் இல்லை .உடனே  அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரும் முக்கால் மணிநேரம் கழித்து வந்தார்.அவர் வந்து பார்த்தபோது  என் நண்பர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்.


இறைவன் படைத்த இந்த உயிர் விலைமதிப்பற்றது.ஆனால் இந்த உயிரோடு இந்த மருத்துவர்கள் விளையாடுகிறார்கள்.சரியான நேரத்தில் மருத்துவர்கள் என் நண்பருக்கு  சிகிச்சை அளித்திருந்தால் அவரை  காப்பற்றி இருக்கலாம் .இன்று எனது நண்பருக்கு நாளை எனக்குகூட இந்த நிலைமை ஏற்படலாம்.மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு மனிதநேயம் எங்கே சென்றது . மனிதநேயத்தை கற்றுக்கொண்டு  பிறகு மருத்துவம் செய்யலாம்.என்று  அவர் கூறினார்.


(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!

அதிகம் பகிருங்கள் உங்களுடைய ஒரு பகிர்வு அடுத்தவர்கள்  உயிரை காப்பாற்றுவதாக இருக்கட்டும் 

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.