தேடல்

Sunday 13 December 2015

கீழக்கரை கடலில் தவறிவிழுந்து வாலிபர் மரணம்..!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கீழக்கரையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீனாட்சி புரத்தை   சேர்ந்த சின்னசாமி,    S.N. தெருவை சேர்ந்த காசீம் மற்றும் சங்கர் ஆகிய  முன்று    நபர் களும் கீழக்கரை ஜெட்டி பாலத்திற்கு சென்றனர்.



இதில் சங்கர் என்ற வாலிபர் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார் உடனே மற்ற இரண்டு நண்பர்களும் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்து தேடினர். நீண்ட நேரம் தேடியும் சங்கரை காணவில்லை  உடனே சலீம் மட்டும் நீந்தி கரைஏறிவிட்டார் சங்கரை தேடி சென்ற சின்னசாமியையும் காணவில்லை. மீன் பிடிப்பவர்கள் மூலம் சுமார் 1 மணி நேரம் தேடிப்பார்த்த பிறகு  கடலுக்கு அடியில் சங்கர் மற்றும் சின்னசாமியை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் சின்னசாமீ காப்பாற்றப்பட்டார், சங்கர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.