தேடல்

Friday 21 August 2015

கீழக்கரையில் மருத்துவமுகாம் ..!!

கீழக்கரை : 21/8/2015
     
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ  முகாம் வடக்குதெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நடந்தது.இம் முகாமை  கீழக்கரை நகர் நல இயக்கம் ,மற்றும் வடக்குதெரு முகைதீனியா கல்விக்குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. 

 மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்டம் பற்றி நமதூர் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமதூர் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது .



  இதன் தொடர்ச்சியாக இன்று 21.08.2015 இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A. ஹமீது அப்துல் காதர் தலைமைவகித்தார்.வடக்குதெரு ஜமாத்தின் தலைவர் ஜனாப் M.Y அக்பர் கான் முன்னிலை வகித்தார்.கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் M.M.S.செய்து இபுறாகீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.மற்றும்  கீழக்கரை நகர் நல இயக்கத்தின்  கௌரவ ஆலோசகர் ஜனாப் ரபீக் சாதிக்.ஜனாப்.ஜபாருல்லா,ஜனாப்,ரபீக் ,மற்றும் பலர்கலந்துகொண்டனர் .


 இந் நிகழ்வில் 200 க்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைவருக்கும் கீழக்கரை அரசு பொது மருத்துவமனையின் அலுவலர்.மருத்துவர் ஜவாகிர் ஹுசைன் MBBS DCH,மருத்துவர் ஜமீர் .தமிழ்செல்வி .ஆகியோர் மருத்துவம் ,ஆலோசனைகள் வழங்கி மேல் சிகிசைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றும் 25 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  MRI,CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது .



இன் நிகழ்ச்சியின் நிறைவாக கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப் A.M ஹாஜா அனீஸ் நன்றி கூறினார்.

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!)

Tuesday 18 August 2015

மரண அறிவிப்பு ..!

கீழக்கரை 18.08.2015

  தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் முதுகுளத்தூர்  தாலுகா மண்டல  துணை வட்டாச்சியர் (துணை தாசில்தார்) திரு பழனிகுமார்  அவர்களுடைய  தந்தை P சுந்தர ராஜன் அவர்கள் இன்று 18.08.2015 அதிகாலை இயற்கை எய்திவிட்டார்கள்.
      அன்னாரின் இறுதி சடங்கு நாளை 19.08.2015  காலை 10 மணியளவில் பரமக்குடி தாலுகா ஊரப்புளி கிராமத்தில் நடைபெறும் 


   அன்னாறை  பிரிந்து வாடும் அக்குடும்பத்தார்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது .
   
 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                  (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Saturday 15 August 2015

வடக்குதெரு முகைதீனியா பள்ளியில் சுதந்திர விழா கொண்டாட்டம்..!!

கீழக்கரை.16.08.2015.
 
  கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் கீழ் இயங்கிவரும் முகைதீனியா கல்விக்குலுமத்தின் சார்பில் 69வது  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

.

   இவ் விழாவிற்கு வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர் ஜனாப் அக்பர் கான்  தலைமை வகித்தார்.வடக்குதெரு ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஜனாப் ரெத்தின முகம்மது முன்னிலை வகித்தார்.மற்றும்,வடக்குதெரு ஜாமத்தின் துணை தலைவர் ஜனாப் ஜாகிர் ஹுசைன் ,முகைதீனிய கல்விக்குலுமத்தின் துணை தலைவர் ஜனாப் முகைதீன் இபுராஹீம்.செயலாளர் ராசிக்தீன்,  பொருளாளர் ,சேகு பஷீர் அகமது,உறுப்பினர்கள்   ஜனாப் ரபீக் சாதிக் ஜனாப் பஷீர் அஹமது  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ஜனாப் K.M,தமீம் ராசா தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.



   இதில் எராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
       (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

கீழக்கரை தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை.


கீழக்கரை :16/8/2015

கீழக்கரை பெஸ்ட் ஸ்டார் வின் பாத் குழுமத்தின் ஒரு பகுதியாக கீழக்கரையில் அதிநவீன வசதியுடன் கூடிய கீழக்கரை மெடிக்கல் மிஷின் இயங்கி வருகிறது 

இம்  மருத்துவமனைக்கு பல நோய்கள் சம்பந்தமாக பல  சிறப்பு மருத்துவர்கள் வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக இம் மருத்துவமனைக்கு பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் DR. சுனிதா M.B.B.S DGO வருகை தரவுள்ளார்கள் இவர் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 22/8/2015 முதல் மாலை 6 மணியிலிருந்து  இரவு  1௦ மணிவரை வருகை தரவுள்ளர்கள் பெண்களுக்கான கர்ப்பப்பை சோதனை ஸ்கேன் செய்து சிறப்புடன் பணியாற்றவுள்ளார்கள் என இம்மருத்துவமனையின் நிர்வாகி ஜாபிர்  சுலைமான் தெரிவித்துள்ளார்.
   
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
    (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Thursday 6 August 2015

அமரர் அப்துல் கலாமுக்கு அமைதி பேரணி கீழக்கரையில்..!

கீழக்கரை செய்திகள் 6/8/2015
முகைதீனியா  கல்விக்குழுமம் சார்பில் மறைந்த மேதகு பாரத ரத்னா முன்னால் குடியரசு தலைவர்  APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ஏர்வாடி முக்குரோட்டில் இருந்து  வள்ளல் சீதக்காதி சாலை வரை கடற்கரை வரையில் நடந்தது  




 
இதில் முகைதீனியா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் முகைதீனிய தமிழ் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து மொத்தம் 250 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.



 இப்பேரணியை கீழக்கரை தாலுகா தாசில்தார் கே.K.M தமிம் ராசா அவர்கள் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்கள்.

  இந்நிகழ்ச்சியில் முகைதீனியா  கல்விக்குழுமத்தின் துணை தலைவர் M.M.S முகைதீன் இபுறாஹீம் .செயலாளர் .மருத்துவர் ராசிக்தீன் MBBS,பொருளாளர்.சேகு பஷீர் அஹமது ,உறுப்பினர் ரபீக் சாதிக் ,பள்ளியின் முதல்வர் நிலோபார் நிஷா ,துணை முதல்வர் சேதுபதி ராஜா . மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இப்பேரணியின் நிறைவில் முகைதீனியா  கல்விக்குமத்தில் பயிலும் அத்துனை மாணவ மாணவிகளும் மறைந்த முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பத்து பொன்மொழிகளை கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துகொன்டனர். 

         என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
                                சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Wednesday 5 August 2015

வபாத் அறிவிப்பு.



கீழக்கரை:06/08/2015
கீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முஹம்மது சிராஜுதீன் அவர்களது தயார் நேற்று (05-08-2015) இரவு 10 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜ்வூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகையுடன் பழைய குத்பா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாற்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம்.! நித்தம் பேணுக..!!