கீழக்கரை : 21/8/2015
மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்டம் பற்றி நமதூர் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமதூர் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடக்குதெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நடந்தது.இம் முகாமை கீழக்கரை நகர் நல இயக்கம் ,மற்றும் வடக்குதெரு முகைதீனியா கல்விக்குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.
மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்டம் பற்றி நமதூர் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமதூர் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இதன் தொடர்ச்சியாக இன்று 21.08.2015 இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A. ஹமீது அப்துல் காதர் தலைமைவகித்தார்.வடக்குதெரு ஜமாத்தின் தலைவர் ஜனாப் M.Y அக்பர் கான் முன்னிலை வகித்தார்.கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் M.M.S.செய்து இபுறாகீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் ஜனாப் ரபீக் சாதிக்.ஜனாப்.ஜபாருல்லா,ஜனாப்,ரபீக் ,மற்றும் பலர்கலந்துகொண்டனர் .
இந் நிகழ்வில் 200 க்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைவருக்கும் கீழக்கரை அரசு பொது மருத்துவமனையின் அலுவலர்.மருத்துவர் ஜவாகிர் ஹுசைன் MBBS DCH,மருத்துவர் ஜமீர் .தமிழ்செல்வி .ஆகியோர் மருத்துவம் ,ஆலோசனைகள் வழங்கி மேல் சிகிசைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றும் 25 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு MRI,CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது .
இன் நிகழ்ச்சியின் நிறைவாக கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப் A.M ஹாஜா அனீஸ் நன்றி கூறினார்.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!)