கீழக்கரை:06.04.2015
நூறு வருடங்களுக்கு முன்பாகவே நமதூர் கீழக்கரைக்கு பொட்டணி துணி வியாபாரம் ஆரம்பம் ஆகிவிட்டது. நாம் சிறு வயது முதலே கண்டதுதான்.
கடந்த ஆண்டுகளில் தலையில் பொட்டணி சுமந்து அந்த பொட்டனிக்குள் தலைசுமை துணிகளை வைத்து கொண்டு வருவார்கள். முன்பு வாகன வசதி இல்லாத காலங்களில்.வசதி வாய்ப்பு இல்லாத ஏழைகள் இந்த தலைசுமை பொட்டணி துணிகளை வாங்குவார்கள்.
இந்த ஊர் மக்கள் எங்களோடு மிக அன்பாக பழகக்கூடியவர்கள். நாங்களும் மாமி, மாமா என்றுதான் அன்போடு அழைப்போம்.எங்களோடு வருபவர்கள் யாரவது தப்புகள் செய்தால் அவர்களை நாங்கள் மீண்டும் கீழக்கரைக்கு அழைத்து வரமாட்டோம்.என்று கூறினார்.
நமதூரை நம்பி வந்து பிழைப்பு நடத்தும் இவர்களை வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்.இவர்கள் வியாபாரம் சிறந்து விளங்க..!
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
நூறு வருடங்களுக்கு முன்பாகவே நமதூர் கீழக்கரைக்கு பொட்டணி துணி வியாபாரம் ஆரம்பம் ஆகிவிட்டது. நாம் சிறு வயது முதலே கண்டதுதான்.
கடந்த ஆண்டுகளில் தலையில் பொட்டணி சுமந்து அந்த பொட்டனிக்குள் தலைசுமை துணிகளை வைத்து கொண்டு வருவார்கள். முன்பு வாகன வசதி இல்லாத காலங்களில்.வசதி வாய்ப்பு இல்லாத ஏழைகள் இந்த தலைசுமை பொட்டணி துணிகளை வாங்குவார்கள்.
தற்போது மூன்று தலைமுறைகளாக கீழக்கரையில் வியாபாரம் செய்து வரும் திரு மனோகரன் அவர்களிடம் கேட்டபோது. நான் கடந்த 35 வருடங்களாக இந்த வியாபாரத்தை செய்துவருகிறேன்.முதலில் எனது தாத்தாதான் 100 வருடங்களுக்கு முன்பு கீழக்கரைக்கு தலைசுமை வியாபாரத்தை துவங்கினார்.பின்பு எனது அப்பா,எனது அப்பாவிற்கு பிறகு நான் இந்த வியாபாரம் இந்த ஊரில் செய்து வருகிறேன்.
நாங்கள் மொத்தம் 90 மேற்ப்பட்டவர்கள் இருக்கிறோம் எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் விளாத்திகுளம் நாங்கள் பெருநாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த ஊருக்கு வந்துவிடுவோம்.இங்கேயே தங்கி வியாபாரத்தை துவக்குவோம்.
இந்த ஊர் மக்கள் எங்களோடு மிக அன்பாக பழகக்கூடியவர்கள். நாங்களும் மாமி, மாமா என்றுதான் அன்போடு அழைப்போம்.எங்களோடு வருபவர்கள் யாரவது தப்புகள் செய்தால் அவர்களை நாங்கள் மீண்டும் கீழக்கரைக்கு அழைத்து வரமாட்டோம்.என்று கூறினார்.
நமதூரை நம்பி வந்து பிழைப்பு நடத்தும் இவர்களை வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்.இவர்கள் வியாபாரம் சிறந்து விளங்க..!
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.