காரைக்குடி - இராமநாதபுரம் - #கீழக்கரை - தூத்துக்குடி - கன்னியாகுமரி. புதிய ரயில்வே இருப்புபாதை போடுவது குறித்து 2008 ஆம் ஆண்டு ரயில்வே இலாகா பரிசீலித்து அதே ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஆறிவிப்பு வெளியிட்டது.
சர்வே முதலில் ,இராமநாதபுரம் - தூத்துக்குடி மார்க்கத்தில் தொடங்கியது அதன் பின் ரயில்வே நிரவகம் உத்தரவின்பேரில் காரைக்குடி - இராமநாதபுரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதையும் சர்வே செய்யப்பட்டது.
காரைக்குடி முதல் - கன்னியாகுமரி சர்வே பணிகள் 2011 ல் முடிந்தது அதற்கான ஆய்வறிக்கை,வரைபடங்கள் மற்றும் செலவாகும் தொகை இவற்றை கணித்து தெற்கு ரயில்வே அறிக்கையை 2011 ஆம் ஆண்டு ரயில்வே போர்டுக்கும் சமர்ப்பித்து.
2008 ஆம் ஆண்டு ஆரம்பமமான இப்பிரச்சனை சென்ற ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து #கீழக்கரை_நகர்_நல_இயக்கம்... &#சமூக_நுகர்வோர்_சேவை_இயக்கமும்...இணைந்து இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி ஆவன புரியுமாறு கேட்டுகொண்டது, இதன் விளைவாக இராமநாதபுரம் M.P அவர்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினர்,
மிண்டும் அவரை 23.11.2014 அன்று கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் : M.M.S.செய்யது இபுராஹிம், செயலாளர்: பசீர் அஹமது, பொருளாளர்: ஹாஜா அனிஸ், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் உபதலைவரும் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் :S.முஹம்மது ரஃபீக் சாதிக் அவர்களும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திரு அன்வர் ராஜா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த ரயில்வே திட்டம் குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் ஜனாப் ,S.ரபீக் சாதிக் அவர்கள் தினமலருக்கு அளித்த பேட்டி
இது சம்பந்தமாக கீழக்கரை நகர் நல இயக்கம் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து இந்த புதிய இருப்பு பாதை போடுவது குறித்து பரிசீளிக்கப்பட்டுவருகிறது.
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.