கீழக்கரை:21/4/2015
இன்று காலை 7.30 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சரக்கு லாரியும் காஞ்சிரங்குடி பஸ்டாப் விளக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு லாரி ஓட்டுனர்களும் படுகாயம் அடைந்தனர்..
அங்கு இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த லாரி ஓட்டுனர்களை இராமநாதபுரம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..
இதுகுறித்து கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது.
புகைப்பட உதவி : சதாம் உசேன்
செய்தி உதவி : முசம்மில் உசேன் (தெற்குதெரு)
(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக...!!
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.