கீழக்கரை 02.04.2015
மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனை புற்றுநோய் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக கமிலா குழந்தைகள் புற்றுநோய் மையம் என்று உருவாக்கி அதற்க்கு தலைவராக புற்று நோய் சிறப்பு மருத்துவர் ஜெயபோஸ் அவர்களை இயக்குனராக நியமித்து செயல்பட்டு வருகிறது.
இங்கு புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைளுக்கு இலவச மருத்துவமும் பார்க்கபடுகிறது . புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் வருடம் தோறும் நிதி உதவி இம் மருத்துவமனைக்கு செய்துவருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது .
இம் மருத்துவமனை புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்காக நிதி உதவி திரட்ட வருடம் தோறும் நிகழ்சிகள் நடத்திவருகிறது.
29.03.2015 அன்று குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இன்னிசை கச்சேரி மதுரை காந்தி மீயுசியத்தில் நடைபெற்றது . இதில் 8000 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.
கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் அதன் பொருளாளர் ஜனாப் ஹாஜா அனீஸ் கலந்து கொண்டு மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையில் புற்று நோய் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு மீனாக்ஷி மிசின் மருத்துவமனையின் ஸ்தாபகர் சேர்மன் திரு.சேதுராமன் அவர்களிடம் நிதியை வழங்கினார்கள்.
நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் மீனாக்ஷி மிசின் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)
No comments:
Post a Comment
கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :
1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.