தேடல்

Wednesday 9 December 2015

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் வெள்ள நிவாரண வழங்கல் ஆலோசனை கூட்டம் ..!!

கீழக்கரை 08/12/2015

கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபை ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் வடக்குதெரு மஸ்ஜிதுல் மன்பயி பள்ளியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தை அணைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் செயலாளர் ஜனாப் முஹைதீன் தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் அணைத்து ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இது குறித்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குதெரு ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் அஜிஹர் அவர்களிடம் கேட்டபோது.


 சமிபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு எந்த வகையில் நமது கீழக்கரை ஜமாஅத் கூட்டமைப்பு உதவுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது,இந்த ஆலோசனையில் அந்தந்த ஜமாத்தார்களிடம் நிதி உதவி பெற்று சென்னையில் இயங்கிவரும் கீழக்கரை மெர்கண்டைல் அசோசியேசனக்கு வழங்கி அவர்கள் மூலமாக பாதிக்கபட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.என்று கூறினார்


 இது சம்பந்தமாக அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் செயலாளர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்/மற்றும் மௌலா முஹய்தீன் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .CELL NO : 9688993380 / 9840943144

             (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
                                  சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.