தேடல்

Tuesday 8 December 2015

கீழக்கரை முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கல்..!!

கீழக்கரை 8/12/2015

  கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் கீழ் இயங்கும் முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் சென்னை மற்றும் கடலூருக்கு மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  வெள்ள நிவாரண பொருட்கள் சென்னையில்  தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 
 இதுகுறித்துவடக்குதெரு  முஹிதீனியா கல்விகுலுமத்தின் தாளாளர்  ஜனாப் மௌலா முஹைதீன் அவர்களிடம் கேட்டபோது


.சென்னை மற்றும் கடலூரில் பாதிக்க பட்ட மக்களுக்கு எங்களது
முஹிதீனியா கல்விகுலுமத்தின் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் தேவைக்கு அரிசி,பருப்பு,போர்வை ,போன்றவை ST கொரியர் மூலம் அனுப்பிவைக்கபட்டது என்று கூறினார்.


இந் நிகழ்வில் முஹிதீனியா கல்விகுலுமத்தின் துணைத்தலைவர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்,துணை செயலாளர்,ஜனாப் அஹமது மிர்சா,செயலாளர் மருத்துவர் ராசிக்தீன்,பொருளாளர்,சேகு பஷீர் அஹமது,பள்ளியின் முதல்வர் .நிலோபர்நிஷா,மற்றும் துணை முதல்வர் ரகுநாத சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.