தேடல்

Sunday 13 December 2015

சென்னையில் மருத்துவ முகாம் ..!! கீழக்கரை நகர் நல இயக்கம் ஏற்பாடு..!!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கடந்த சில தினங்களுக்கு முன் நமது தலை நகரை மழை வெள்ளம் புரட்டி போட்டு அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபாட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுங்கம்பாக்கம் நிவாரண முகாம்களுக்கு சென்று வழங்கியது.





 இதன் தொடர்ச்சியாக சென்னை நகர் அணைத்து பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் தோற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.இதனை கருத்தில் கொண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கமும்,மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையும் இணைந்து .கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகரும்,கௌரவ ஆலோசகருமான ஜனாப் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் தலைமையில் .சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி தொடக்க பள்ளியில் இம் மருத்துவ முகாம் நடைபெற்றது.சுமார் ஆயிரம் பேருக்கு குழந்தை உட்பட அனைவருக்கும் மருத்துவ உதவி செய்ததுடன் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.






இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌவுரவ ஆலோசகர் ஜனாப் P.M.S.ரபீக் சாதிக் அவர்கள் கூறுகையில் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் படும் இன்னல்களை கண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று  பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்ளுக்கு தேவையான பொருட்களை வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் நமது இயக்கமானது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தோற்று நோய்களால் அவதிப்படும் பொதுமக்களுக்கு மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமுகாம் நடத்தி மருத்துவ உதவி செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது .என்று கூறினார்.


  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )

         சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ....!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.